ETV Bharat / state

கல்லூரி மாணவர் ரயில் மோதி உயிரிழப்பு

கும்பகோணம் சாஸ்திரா பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு பயிலும் ஆந்திராவைச் சேர்ந்த மாணவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 12, 2022, 6:07 PM IST

ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டம் கோதாவரி பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீனு. இவரின் மகன் நல்லபோத்ல ரெங்கையா (18). இவர், கும்பகோணம் சாஸ்திரா பல்கலைக்கழகத்தில் பிடெக் கணினி அறிவியல் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இவர், கும்பகோணம் தனியார் தங்கும் விடுதியில் தங்கி கல்லூரி சென்று வந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி வியாழக்கிழமை இரவு நண்பரை பார்க்க செல்வதாக சக அறை நண்பரிடம் தெரிவித்து விட்டு வெளியே சென்றார்.

அதே நாள் நள்ளிரவு, சுமார் 12 மணியளவில் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்குச் சென்ற அந்தியோதயா விரைவு ரயிலில், கும்பகோணம் மேம்பாலம் அருகே ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து போனதாக ரயில் இன்ஜின் ஓட்டுநர் கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு தகவல் தந்துள்ளார். இதன் அடிப்படையில் ரயில்வே காவல் நிலைய காவல் துறையினர் சம்பவயிடத்திற்குச் சென்று பார்த்தனர்.

அப்போது அடையாளம் தெரியாத இளைஞனின் சடலம் கிடந்துள்ளது. அருகில் இருந்த செல்போன் மூலம் அவரது பெற்றோரை தொடர்பு கொண்ட காவல் துறையினர் அவர்களுக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் அந்த இளைஞன், ரங்கையா என்றும், கும்பகோணம் சாஸ்திரா பல்கலைக்கழக மாணவன் என தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து, மாணவனின் உடலை கைப்பற்றி, உடற்கூராய்விற்காக, கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இந்நிலையில் இன்று ஆந்திராவில் இருந்து கும்பகோணத்திற்கு வந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், மாணவன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கும்பகோணம் ரயில்வே காவல் துறையினரிடம் புகார் அளித்தனர்.

உடற்கூறு ஆய்வின் முடிவிற்கு ஏற்ப, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் உறுதியளித்ததை தொடர்ந்து இறந்த மாணவனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இறந்த மாணவனின் உடற்கூறாய்வுக்கு சம்மதம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மாணவனின் உடல் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உடற்கூராய்வு நடைபெற்றது.

இதையும் படிங்க: ரேஷன் துவரம் பருப்பில் முறைகேடா?.. மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டம் கோதாவரி பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீனு. இவரின் மகன் நல்லபோத்ல ரெங்கையா (18). இவர், கும்பகோணம் சாஸ்திரா பல்கலைக்கழகத்தில் பிடெக் கணினி அறிவியல் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இவர், கும்பகோணம் தனியார் தங்கும் விடுதியில் தங்கி கல்லூரி சென்று வந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி வியாழக்கிழமை இரவு நண்பரை பார்க்க செல்வதாக சக அறை நண்பரிடம் தெரிவித்து விட்டு வெளியே சென்றார்.

அதே நாள் நள்ளிரவு, சுமார் 12 மணியளவில் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்குச் சென்ற அந்தியோதயா விரைவு ரயிலில், கும்பகோணம் மேம்பாலம் அருகே ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து போனதாக ரயில் இன்ஜின் ஓட்டுநர் கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு தகவல் தந்துள்ளார். இதன் அடிப்படையில் ரயில்வே காவல் நிலைய காவல் துறையினர் சம்பவயிடத்திற்குச் சென்று பார்த்தனர்.

அப்போது அடையாளம் தெரியாத இளைஞனின் சடலம் கிடந்துள்ளது. அருகில் இருந்த செல்போன் மூலம் அவரது பெற்றோரை தொடர்பு கொண்ட காவல் துறையினர் அவர்களுக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் அந்த இளைஞன், ரங்கையா என்றும், கும்பகோணம் சாஸ்திரா பல்கலைக்கழக மாணவன் என தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து, மாணவனின் உடலை கைப்பற்றி, உடற்கூராய்விற்காக, கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இந்நிலையில் இன்று ஆந்திராவில் இருந்து கும்பகோணத்திற்கு வந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், மாணவன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கும்பகோணம் ரயில்வே காவல் துறையினரிடம் புகார் அளித்தனர்.

உடற்கூறு ஆய்வின் முடிவிற்கு ஏற்ப, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் உறுதியளித்ததை தொடர்ந்து இறந்த மாணவனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இறந்த மாணவனின் உடற்கூறாய்வுக்கு சம்மதம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மாணவனின் உடல் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உடற்கூராய்வு நடைபெற்றது.

இதையும் படிங்க: ரேஷன் துவரம் பருப்பில் முறைகேடா?.. மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.